search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரதராஜ பெருமாள் கோவில்"

    • வடகலை, தென்கலை பிரிவினரிடைய பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • கைகலப்பாக மாறி அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழுகிறது. வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.

    மலையில் இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளை பழைய சீவரத்தில் கோவில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் எதிர்கொண்டு அழைத்து செல்லும் வைபவம் நடைபெற்றது.

    இந்த உற்சவத்தின் போது பிரபந்தத்தை யார் முதலில் பாடுவது என்பது தொடர்பாக வடகலை-தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறி அர்ச்சகர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பிரபந்தம் பாடப்பட்டது.

    வடகலை,தென்கலை பிரிவினரிடைய பிரபந்தம் பாடுவது தொடர்பான வழக்கு ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. கோவிலில் பிரபந்தம் பாடுவது தொடர்பாகவும் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகலை, தென்கலை பிரிவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று.
    • ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

    ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்:

    நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று. கடந்த 1926-ம் ஆண்டில் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. இதை நிறுவிய ஸ்ரீஅரவிந்தர், அவரது தலைமை சிஷ்யையாக விளங்கிய ஸ்ரீஅன்னை ஆகியோரது சமாதிகள் இங்கு உள்ளன. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் எராளமான பக்தர்கள் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள். யோகா, மன அமைதியை விரும்புவோரை ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் கவர்ந்து வருகிறது.

    ஆரோவில்:

    புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது. உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124 நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

    பொட்டானிக்கல் கார்டன்:

    புதுச்சேரி புது பஸ் நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826&ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

    அரிக்கமேடு:

    பழங்காலத்தில் ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் அரிக்க மேடு ஆகும். புதுச்சேரியில் இருந்து 4 கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. வரலாற்று விரும்பிகளுக்கு பிடித்த இடம்.

    இவை தவிர 300 ஆண்டு பழமையான மணக்குள விநாயகர் கோவில், கி.பி. 600-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில், பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம், பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும், சில்ட்ரன்ஸ் பார்க், பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், காந்தி மியூசியம், பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் பார்க்கத் தகுந்தவை.

    • முதலைக்கோ நீரில் இருந்தால் பலம் அதிகம்.
    • யானையின் அபயக் குரலைக் கேட்டதும் திருமால் ஓடி வந்தார்.

    திருமாலுக்கு மலர்கள் சமர்ப்பிப்பதைத் திருத்தொண்டாகக் கொண்டிருந்தது கஜேந்திரன் என்ற யானை. அந்த யானை ஓர் நாள் திருமாலுக்காக குளத்தில் இறங்கி, தாமரை மலர்களை பறித்தது.

    அப்போது அதன் காலை ஓர் முதலை கவ்விப் பிடித்து கொண்டது. அதன்பிடியில் இருந்து தப்பிக்க யானை செய்த கடும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

    முதலைக்கோ நீரில் இருந்தால் பலம் அதிகம். இந்த யானையின் வேதனையைப் புரிந்து கொண்ட மற்ற யானைகளும் கஜேந்திரனை காக்க முடியாமல் குளத்தின் கரையில் கூடி, கதறிப் பிளிறியபடி இருந்தன. கஜேந்திரன் தன் நிலையை உணர்ந்து தன்னைக் காப்பாற்றக் கூடியவர் திருமாலே என்று அறிந்து கொண்டது. உடனே ஆதிமூலமே என்று கூவி அழைத்தது.

    யானையின் அபயக் குரலைக் கேட்டதும் திருமால் ஓடி வந்தார். கருடனை கூட அழைக்காமல் மின்னல் வேகத்தில் புறப்பட்ட அவர் தான், போய் சேர்வதற்குள் கஜேந்திர யானைக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், சக்ராயுதத்தை ஏவி விட்டார். அந்த சக்ராயுதம் முதலை தலையை அறுத்தது. இதனால் யானை தப்பியது.

    இப்படி யானைக்கு மின்னல் வேகத்தில் அருளிய ஆதிமூலத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அனைத்து திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்சம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் கருட சேவையில் காட்சி அளிக்கிறார்.

    • சாமி கோவில் வளாகத்தில் உலா வந்தடைந்தது.
    • திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரம்மோ ற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழா இன்று 25-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று காலை வரதராஜ பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அப்போது பட்டாச்சாரி யார்கள் வேத மந்திரம் முழுங்க மங்கள வாத்திய த்துடன் கொடியேற்று விழா நடைபெற்றது. பின்னர் சாமி மற்றும் கொடி மரத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. சாமி கோவில் வளாகத்தில் உலா வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு அம்ச வாகனத்திலும் , 2-ம் நாள் திருபல்லக்கிலும், இரவு சூரிய பிரபை வாகனத்திலும், 3-ம் நாள் ராஜகோபாலன் சேவை, சேஷ வாகனத்திலும், 4 ம் நாள் ஸ்ரீ வேணு கோபாலன் சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின்னர் 5-ம் நாள் நாச்சியார் திருக்கோலம் மற்றும் ஊஞ்சல் உற்சவமும், இரவு அனுமந்த் வாகனத்திலும், 6-ம் நாள் மாலை யானை வாகனத்திலும், 7-ம் நாள் காலை சூர்ணாபிஷேகம், 108 கலச திருமஞ்சனம், இரவு புண்ணியகோடி விமானத்திலும், 8-ம் நாள் காலை வெண்ணைத்தாழி உற்சவம் இரவு குதிரை வாகனத்திலும் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை மாதம் 3-ந் தேதி, சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் உற்சவம் 5-ந் தேதியும் நடைபெற வுள்ளது. 6-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவ டைகிறது.விழா விற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கட கிருஷ்ணன், அறங்காவலர் குழுத்தலைவர் சாரங்க பாணி, அறங்காவலர்கள் ராதாகிருஷ்ணன், கிஷோர், கமலநாதன், கோவிந்த ராஜலு மற்றும் தலைமை எழுத்தர் ஆழ்வார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது.
    • ஜெயவிலாஸ் குழும ெதாழிலதிபர் டி.ஆர்.வரதராஜ் தொடங்கி வைக்கிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்துள்ள செட்டிக்குறிச்சி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி- பூதேவியுடன் பெருமாள் காட்சி அளிக்கிறார்.

    இப்பகுதியில் பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) கோவில் கும்பா பிஷேகம் நடைபெறுகிறது.

    இதையொட்டி நாளை(23-ந்தேதி) காலையில் சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. மாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறு கின்றன. 24-ந்தேதி காலையில் புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், பல்வேறு ஹோமங்கள் நடக்கின்றன.

    காலை 10.30 மணிக்கு மூலவர் வரதராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவிக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. மாலையில் பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெறுகின்றன. வருகிற 25-ந்தேதி காலையில் கோபூஜை, பூர்ணாகுதி, சங்கல்ப பூஜை நடக்கிறது.

    யாகசாலை பூஜையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்க பாண்டி யன், அசோகன், ரகுராமன், மான்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    தொடர்ந்து காலை 10.10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும், 10.30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10.45 மணிக்கு ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. மதியம் அன்னதானத்தை ஜெயவிலாஸ் குழும ெதாழிலதிபர் டி.ஆர்.வரதராஜ் தொடங்கி வைக்கிறார்.

    விழாவை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கே.வி.கே.ஆர்.பிரபாகரன் மற்றும் செட்டிகுறிச்சி கிராமமக்கள் செய்து வருகின்றனர்.

    • மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது.
    • 108 ராமானுஜ ஸ்நபன கலசம், மகா சங்கல்பம், 108 கலச அபிஷேகம், தீபாராதனை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே கோவில் வழியில் பெரும்பண்ணை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருக்கல்யாண மஹோத்ஸவ நிகழ்ச்சி அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது.

    மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் வரதராஜ பெருமாளுக்கும் பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. முன்னதாக வருகிற 4-ந் தேதி காலை 8 மணிக்கு வாசுதேவ புண்யாகம், 108 ராமானுஜ ஸ்நபன கலசம், மகா சங்கல்பம், 108 கலச அபிஷேகம், தீபாராதனை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து 5-ந்தேதி திருக்–கல்–யாண நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • பெரியமடத்துபாளையம் பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 16-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • இன்று பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள பெரியமடத்து பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு 16-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவிலில் மஞ்சள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இன்று பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இரவு பக்தி மற்றும் கிராமிய பாடல்கள் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் ஆன்மீக வாழ்வியல் நெறிமுறைகள் பற்றி சொற்பொழிவும் நடைபெறுகிறது.

    நாளை காலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், மதியம் மகா தரிசனம் பூஜையும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெறுகிறது. கோவிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் கலியுக வரதராஜ பெருமாளும், தாயார் மகாலட்சுமியும், தும்பிக்கையாழ்வார், இராமானுஜர், ஆஞ்சநேயர், கருடர், துவார பாலகர்கள் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரிய மடத்து பாளையம் கோவில் தலைவர் ஆறுமுகம் செய்துள்ளார். பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×